மதுரை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.10 கோடி மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது..

மதுரை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.10 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு 6000 பேருக்கு முறைக்கேடாக ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த முறைகேடு சம்பந்தமாக மதுரையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் 6,777 பேருக்கு பேட்ஜ் வழங்கி ரூ.10.16 கோடி ஊழல் செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2015ல் வட்டார போக்குவரத்து அலுவலராக இருந்த கல்யாண்குமார் உட்பட 6 பேர், 11 ஓட்டுநர் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!