மதுரையில் சுட்டெரித்த சூரியன் வாட்டி எடுத்த நிலையில் பொதுமக்களை குளிர்வித்த மழை.. மக்கள் மகிழ்ச்சி.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 104 பாரன்ஹீட் அளவிற்கு வெயில் வறுத்து எடுத்தது. இந்த நிலையில் இன்று மாலை சரியாக மூன்று முப்பது மணி அளவில் மதுரையில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மாட்டுத்தாவணி, அண்ணாநகர், விமான நிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல், மாடக்குளம், பழங்காநத்தம், காளவாசல், திருப்பரங்குன்றம், திருநகர் மற்றும் அதன் சுற்றியுள்ள அனைத்து மதுரை நகர் பகுதியில் முழுவதுமே பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது தற்பொழுது காலையில் வெயில் வாட்டி வந்த நிலையில்  குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!