மதுரையில் பெண் ரயில்வே கார்டை தலையில் வெட்டி செல்போன், மற்றும் பர்சை பறித்து, திருடர்கள் அட்டகாசம்: 

மதுரையில் பெண் ரயில்வே கார்டை தலையில் வெட்டி செல்போன், மற்றும் பர்சை பறித்து , திருடர்கள் அட்டகாசம்:

மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில்வே கார்டாக வேலை பார்ப்பவர் ராக்கி (28)கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ரயில்வே காலனியில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் திண்டுக்கலிருந்து திருநெல்வேலி செல்லும் காலி ரயில் பெட்டிகளின் கார்டாக திண்டுக்கல்லில் ஏறியுள்ளார்.ரயில் மதுரை கூடல்நகர் பகுதியில் சிக்னலுக்காக காத்து கொண்டிருந்த போது திடீரென்று ரயில் பெட்டியில் ஏறிய இருவர்  ரயில்வே பெண் கார்டு கையிலிருந்த கை பையை பறிக்க முயன்று உள்ளார்கள்.அவர் தர மறுத்ததையடுத்து கத்தியால் தலையில் வெட்டி காயத்தை ஏற்டுத்தி பையை பறித்து சென்றனர்.  பையில் செல்போன் மற்றும் 500 ருபாய் பணம் இருந்துள்ளது.

தகவல் அறிந்த இரயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவரை மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து வழிப்பறியில் ஈடுப்பட்டவர்களை விசாரித்து தேடி வருகின்றனர்.

.வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!