திருப்பரங்குன்றம் இருப்பு பாதையில் ரயில் மோதி கொத்தனார் உயிரிழப்பு; போலீசார் விசாரணை..

திருப்பரங்குன்றம் இருப்பு பாதையில் ரயில் மோதி கொத்தனார் உயிரிழப்பு; ரயில்வே போலீசார் விசாரணை..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ராஜபாண்டி (வயது 28). இவர் வழக்கம் போல் இன்று அதிகாலையில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற போது ரயில் மோதி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த ரயில்வே எஸ் ஐ சையது குலாம் மற்றும் போலீசார் ராஜபாண்டி உடலை கைப்பற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து ரயில்வே போலீஸார் விசாரணை வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!