முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..

முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக பெண்கள் தினம் முன்னிட்டு மாநகராட்சி சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது தனிப்பட்ட சேமிப்பின் மூலமாக உணவு வழங்கி பேசுகையில், உலகில் பெண்கள் பல்வேறு நிலைகளில் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்கள் நினைத்தால் முதியோர்களை அரவணைத்து காப்பகங்களே தேவையில்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், பாலமுருகன், ரமேஷ்குமார் மற்றும் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!