மதுரை அருகே அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல்; போலீசார் தடியடி..

அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல்; மதுரை அருகே பரபரப்பு..

கரூரில் கொலை செய்யப்பட்ட ராமர் பாண்டியன் உடல் இறுதி ஊர்வலம் மதுரை, சிந்தாமணி 4 வழி சாலையிலிருந்து சிந்தாமணி திரும்பும் போது அரசு பேருந்து மீது திடீரென கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சொட்ட தட்டி சென்ற சென்ற 47 எண் கொண்ட அரசு பேருந்து மதுரை சிந்தாமணி அருகே சென்ற போது ராமர் பாண்டியன் உடல் இறுதி ஊர்வலத்தில் வந்த நபர்கள் திடீரென கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அரசு பேருந்தின் முன்பக்க மற்றும் பின் பக்க கண்ணாடிகள் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!