100% ஊரடங்கு உத்தரவை கடைபிடித்த மதுரை மக்கள்…

மதுரை மாநகராட்சி உள்ளிட்ட ஐந்து மாநகராட்சியில் நான்கு நாட்களுக்கு கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவில் யாரும் வெளியே வரக் கூடாது எனவும் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று 100% பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை, இதனால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பைபாஸ் சாலை மற்றும் பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் இந்த ஊரடங்கு உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!