கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்தவும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு
உடனே நிறைவேற்றிட வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம்சார்பில் நடைப்பெற்றது.குத்தாலம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் பணி நேரத்தில் 1 மணி நேரம் முன்பாக வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் வட்டார தலைவர் R.வெங்கட கிருஷ்ணன், மாவட்ட தனிக்கையாளார் S.மனோகரன், வட்டார செயலாளர் M.நடராசன், வட்டப் பொருளாளர் M.சங்கர், மாவட்ட இணைச்செயலாளர் v.நல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பொறியாளர்கள் ,ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள்,அலுவலக ஊழியர்கள்மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வெளிநடப்பு செயதனர்.
இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.


You must be logged in to post a comment.