கபசுர குடிநீர் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல், இலுப்பூர் கடைவீதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உத்திரங்குடி ஊராட்சி செயலாளர் அஹமது கபீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செம்பை ஒன்றிய செயலாளர் சுதாகர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் அப்துல் காதர், முகம்மது ஆசிக், தமிமுல் அன்சாரி, நஜிமுல்லா, ரஹமத்துல்லா மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!