மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே ஆயப்பாடி கடைவீதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, கிருமிநாசினி, முகக்கவசம் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் பஜ்லுல் ஹக், ஒன்றிய குழு உறுப்பினர் சுந்தர், ஊராட்சி சிறுபான்மைப் பிரிவு செயலாளர் முகமது ஜஹாங்கீர் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் கொத்தவால் ஹஜ் முகமது செய்திருந்தார்.
இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.





You must be logged in to post a comment.