கொரோனா வைரஸ் கிருமி எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி ஊராட்சியில் ஆயப்பாடி கடைவீதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக கொரோனா வைரஸ் கிருமி எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஜெஹபர் ஹுசைன் தலைமை வகித்தார். நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் கலந்துகொண்டு கரோனா வைரஸ் கிருமி எதிர்ப்பு ஹோமியோபதி மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எம்.நூருல்லாஹ்,  வக்ஃப் நிர்வாகசபை தலைவர்கள் முகமது ரபிக், முகமது பாருக், ஊராட்சி மன்ற தலைவர் சம்சாத் ரபிக், ஒன்றிய துணை பெருந்தலைவர் பாஸ்கர், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சார்ந்த பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!