மதுரை மாவட்டம் எழுமலை அருகே உலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகன் ஜெயசூர்யா 21 பட்டதாரி இளைஞரான இவர் அதே ஊரில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார், இவரும் இவரது தெருவில் வசிக்கும் முருகன் என்பவரது மகளான கல்லூரி மாணவி பாண்டீஸ்வரி 18 என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.,இந் நிலையில் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பாண்டீஸ்வரிக்கு அவரது தாய்மாமனுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.,இந்நிலையில் காதலன் ஜெயசூர்யா கடைக்கு வந்த பாண்டீஸ்வரி காதலனுடன் இணைந்து இருவரும் விஷம் அருந்தி கடையில் மயங்கி கிடந்துள்ளனர்.,மயங்கி கிடந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த சூழலில் இவர்களை பரிசோதித்த இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.,தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெற்றோரின் எதிர்ப்பால் காதலர்கள் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,

You must be logged in to post a comment.