இராமேஸ்வரம் மேம்பாலம் 1988ம் ஆண்டு, கிட்டத்தட்ட 14வருடங்கள் பணிகள் நடைபெற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பாலம் கிட்டத்தட்ட 2.2 கிலோ மீட்டர் நீளத்தில் இந்தியாவின் கடலின் மேல் கட்டப்பட்ட நீண்ட பாலமாகும்.
இப்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகளும் சென்ற வண்ணம் உள்ளது. ஆனால் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருளில் இப்பாலம் மூழ்கி கிடக்கிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆகையால் அரசு அதிகாரிகள் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது.




You must be logged in to post a comment.