மின்சார தேவை ஒரு புறம்.. வீண் விரயம் மறுபுறம்..

கீழக்கரையில் கிட்டதட்ட நாற்தாயிரத்திற்கு மேலான மக்கள் 21 வார்டுகளில் வசித்து வருகின்றனர். அதே போல் கீழிக்கரையில் மின்சார வினியோகமும் விடுமுறை மற்றும் பெருநாள் காலங்களில் அதிகமாக இருக்கும். இதை அடிப்படையாக வைத்து மாதந்தோறும் பராமரிப்பு என ஒரு மின் தடை உண்டு, ஆனால் எந்த வகையான பராமரிப்பு என்று யாரும் புரிந்து கொள்ள முடியாது காரணம் அதையும் தாண்டி பல நாட்கள் அறிவிக்கப்படாத மின் வெட்டுக்கள் உண்டாகும். ஆனால் பொதுமக்கள் மத்தியில் எப்பொழுதுமே இது மின்சார சேமிப்புக்கான தடை என்றே கூறப்படுவதுண்டு.

ஆனால் அதை பொய்ப்பிக்கும் வகையில் சில இடங்களில் பகல் நேரத்திலும் தெரு விளக்குகள் எரிந்த வண்ணமே உள்ளது. ஆனால் பல முக்கிய தெருக்கள் வெளிச்சம் இல்லாமல் இருளடைந்து கிடக்கிறது. . கீழக்கரை மின்சார வாரியம் இது போன்ற வீண்விரயங்களை குறைத்து இருண்டு கிடக்கும் பகுதிகளுக்கு விளக்குகளை பொருத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!