கோவையில் மாட்டுக்கறி விற்ககூடாது என மிரட்டிய பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது தமுமுக புகார்..

கோவையில் மாட்டுக்கறி விற்ககூடாது என மிரட்டிய பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது தமுமுக புகார்..

மதரீதியாக பதட்டம் ஏற்படுத்த முயலும் பா.ஜ.க நிர்வாகி சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்திட வேண்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் வழங்கப்பட்டது

தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான்  தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கோவை உடையாம்பாளையம் பகுதியில் ஆபிதா என்ற பெண்மணி சில்லி மற்றும் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார் இவரின் குடும்ப வறுமையின் காரணமாக உழைத்து வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பசித்தவர்களுக்கு குறைந்த விலையில் பீப் பிரியாணி மற்றும் சுக்கா வறுவல், சில்லி ஆகியவைகளை சமைத்து விற்பனை செய்து தன்னுடைய வறுமையை போக்கி வந்துள்ளார்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட அணியின் நிர்வாகி சுப்பிரமணி இந்த பெண்ணின் கடைக்கு சென்று இங்கு நீ வியாபாரம் பண்ண கூடாது என்று மிரட்டல் தொனியில் அந்த பெண்மணியையும் அவர் கணவரையும் மிரட்டியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது

குறிப்பாக வடநாடுகளில் இஸ்லாமியர்கள் மீது மாட்டிறைச்சி என்னும் பெயரைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களை தாக்குவது, மிரட்டுவது, துரத்துவது என்று வாடிக்கையாக சங்பரிவார சக்திகள் நிகழ்த்தி வருகிறார்கள் அதன் காணொளிகளையும் நாம் வலைத்தளங்களில் பார்த்து தான் வருகிறோம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அவரவர் விரும்பும் உணவை உண்ணும் அதிகாரம், உரிமை உள்ளபோது ஊர் கட்டுப்பாடு இங்கே மாட்டுக் கறி தின்ன கூடாது என்ற தனி சட்டத்தை இஸ்லாமிய வெறுப்புக்காக பயன்படுத்தும் வார்த்தையாக பயன்படுத்துவதும் பேராபத்தாக முடியும். ஆகவே இது போன்ற செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.

வடநாட்டு பாணியில் சங்பரிவார பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி சுப்பிரமணி சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்மணி ஆபிதாவை பொதுவெள்ளியில் மிரட்டும் தொனியில் பேசியதற்கு சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்து தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என்றும்

ஆபிதா அவர்களின் கடையின் அருகில் அசைவ கடைகள் இருந்த போதும் இவர் இஸ்லாமிய பெண்மணி என்பதினால் இவர் மீது வெறுப்பு பேச்சு பேசி வெறுப்புணர்வை விதைத்துள்ளார். இவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து மேற்கொண்டு இதுபோன்று எவரும் செயல்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கையாக இந்த வழக்கை கையாள வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!