நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் சீமான் பேசியது தொடர்பாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது அரசுக்கு எதிராக இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும், தேச ஒற்றுமையை குழைக்கும் வகையில் பேசியதாகவும் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் சீமானுக்கு எதிராக இந்த தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.


You must be logged in to post a comment.