கொம்பூதியில் உறியடி நிகழ்ச்சி…

இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி செப்., 2ல் சமுதாயக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிராம தேவதைகள் வழிபாடு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. விளையாட்டு போட்டிகள், வழுக்கு மரம் ஏறும் போட்டியை ஓய்வு ஆசிரியர் சாத்தையா துவக்கி வைத்தார்.

சென்னை வெங்கடேஸ்வரி அறக்கட்டளை நிறுவனர் கொம்பூதி செல்வராஜ், சாந்தி ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். மதியம் 3 மணியளவில் உறியடி உற்சவத்தை மங்கள சாமி துவக்கி வைத்தார். வீரசெல்வம் உறியடித்தார். மாலை 5 மணியளவில் தேரோட்டத்தை அரியப்பன் துவக்கி வைத்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், இராமநாதபுரம் மாவட்ட யாதவ மஹா சபை தலைவர் வேலு மாணிக்கம் மனோகரன், இராமநாதபுரம் த.மா.கா மேற்கு மாவட்டத் தலைவர் சோபாரெங்கநாதன், டாக்டர் அனுசியா, கிராம தலைவர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர். கொம்பூதி யாதவர் சங்கத் தலைவர் முருகன், செயலாளர் அரியப்பன், பொருளாளர் கணபதி, விழா குழு நிர்வாகிகள் கண்ணன் கோயில் நிர்வாகி வெள்ளைச்சாமி, அர்ச்சகர் சண்முகவேலு, தலைவர் சண்முகவேலு, துணை தலைவர் சேதுபாண்டி, செயலர் முத்து, துணை செயலர்கள் பாண்டி, முத்துக்கூரி, வீரகண்ணன், செல்வராஜ், பால்ராஜ், பொருளாளர் பூமி நாதன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!