கீழக்கரை கும்பிடு மதுரை பள்ளியில் குடியரசு தின விழா..

கீழக்கரை கும்பிடு மதுரை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.  இவ்விழாவிற்கு கும்பிடுமதுரை ஜமாஅத் தலைவர் முன்னிலையில், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.  இவ்விழாவில் தில்லையேந்தல்  ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின்  தலைமையாசிரியர் முகம்மது இபுராகிம் சிறப்புரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவி மற்றும்  தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் கணித உதவி பேராசிரியை அப்ரின் ஆயிஷா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு   பரிசுப் பொருட்களை வழங்கினார். மேலும் விழாவின் ஏற்பாடுகளை  SMCஉறுப்பினர்கள் மற்றும் உதவியாசிரியை சாபிஹா்ஆகியோர் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!