கீழக்கரையில் மின்சார உயர்வை கண்டித்து திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்…..

தமிழகம் முழுவதும் மின்சாரம் உயர்வை கண்டித்து திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர கழக செயலாளர் பசீர் அகமது மற்றும் மாணவரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான் தலைமையில் 21-வார்டு கிளைச் செயலாளர்கள் முன்னிலையிலும் தமிழகசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளியை கடைப்பிடித்து வார்டு வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அவைத்தலைவர் மணிகண்டன், துணைச் செயலாளர் ஜமால் பாரூக்,மற்றும் கென்னடி, பொருளாளர் சித்திக், மாணவரணி துணை அமைப்பாளர் இப்திகார் ஹசன், மூர் ஜெயினுதீன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முகம்மது சுஐபு, முத்துவாப்பா, மாவட்ட பிரதிநிதிகள் ஜபருல்லா, மரைக்காயர், மற்றும் கெஜி, அஸ்கர், மூர்ஜெயினுதீன், பயாஸ், நையும் அக்தர், மரகாப சித்திக், செல்வம், ஹனிபா, அஜ்மல் கான் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!