கீழக்கரை கல்லூரியில் இருந்து இந்திய கால்பந்து அணிக்கு தோ்வான மாணவர்..

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரீங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியைச் சார்ந்த அபுல் ஜராருதீன் (வயது 19.) இவர் சிறுவயதிலிலிருந்தே கால்பந்து விளையாட்டை ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் 19வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு தோ்வு செய்யப்பட்டு வரும் டிசம்பர் மாதம் அரபு நாடான கத்தாரில் நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொள்ள உள்ளார்.

இவரை கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சுரேஷ் குமார் பாராட்டினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!