கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 2.25 கோடி மதிப்பீட்டில் தினசரி வாரச்சந்தை அடிக்கல் நாட்டு விழா சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசு , காந்தி , வீராசாமி , சாரங்கன் , ஹபீபா சிராஜ்தீன் ,மகாலட்சுமி பாண்டியன், அன்னபூரணி நாகராஜன், பத்மாவதி சிவகுமார், சிவசக்தி ரவி, கல்பனா மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.