கீழக்கரையில் மலேரியா தடுப்பு மருந்து தெளிப்பு பணி !ஒத்துழைப்பு வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்..!

ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,கீழக்கரை, உச்சிப்புளி, புதுமடம், பெரியபட்டினம் மற்றும் தேவிபட்டினம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று தற்போது மலேரியா கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த மருந்து வீடுகளின் உட்புறங்களில் அடிப்பதன் மூலம் மலேரியா கொசுக்களை பரப்புகின்ற முதிர் கொசுக்கள் முற்றிலுமாக அழிந்துவிடும். அதனால், மலேரியா பரவாமல் தடுக்க முடியும்.எனவே, அரசு சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக முழுவதாக மருந்து தெளிக்க வரும்போது, பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கொசு மருந்து அளிக்க பொது சுகாதாரத் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!