இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்றும் பொது மக்களுக்கு அச்சத்தில் இருப்பதாகவும் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தாமதித்து வருவதாகவும் கூறி கீழக்கரை சமூக ஆர்வலர்கள் தொண்டு இயக்கங்கள் இணைந்து பொதுமக்களிடம் போஸ்ட் கார்டு மூலம் கோரிக்கைகளைப் பெற்று 3000 போஸ்டர் கார்டுகளை முதலமைச்சருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் நாய்களை கிழக்கே நகராட்சி முறையாக பிடித்து அகற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரை சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புகள் இணைந்து தபால் நிலையத்தில் போஸ்டர் கார்டுகளை வழங்கினர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கை கருத்தில் கொண்டு தமிழக முதல்வருக்கு கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு நாய்களை பிடித்து அகற்ற உத்தரவிட கோரி பொதுமக்கள் சார்பாக பெறப்பட்ட 3000 போஸ்ட் கார்டுகளை வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு பொறுப்பாளர் சதக் இலியாஸ், நகர் மன்ற உறுப்பினர் சேக் ஹூசைன், சமூக ஆர்வலர்கள் முஹம்மது அஜிஹர், அபுபக்கர் சித்தீக் , நசுருதீன் , பாரூக் ராஜா முஹம்மது , பைசல் , பாரூக் , முகைதீன் இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









