உசிலம்பட்டி அருகே கவணம்;பட்டியில் மாபெரும் கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியில் அமைந்துள்ள வீரா கோவிலின் திருவிழாவை முன்னிட்டு கவணம்பட்டி வீரா கோவில் மூன்று பங்காளிகள் மற்றும் இளைஞர்கள் குழு சார்பில் மாபெரும் கிடா முட்டு போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம் சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 160 ஜோடி கிடாக்கள் பங்கேற்றனர்.குரும்பை, சின்னக்கருப்பு, வெள்ளைமறை, கண் செவலை என பல்வேறு வகையான கிடாக்கள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் கிடாக்களின் வயது, ஆறுபல் கடப்பல் அடிப்படையில் நேருக்கு நேர் மோதவிட்டு அதிகபடியான எண்ணிக்கையில் மோதிக்கொள்ளும் கிடாக்களுக்கு பித்தளை அண்டா பரிசாக வழங்கப்பட்டது மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து கிடாக்களுக்கும் சிறிய மற்றும் பெரிய சில்வர் அண்டாகள் விழா கமிட்டியினரால் பரிசாக வழங்கப்பட்டது.இந்த போட்டியை உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு கழித்தனர்.தமிழ்நாடு பராம்பரிய கிடா முட்டுச்சங்கத்தினர் மற்றும் கோவில் விழா குழுவினர் விழா ஏற்ப்பாடுகளை செய்திருந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!