உச்சிப்புள்ளி ரோட்டரி சங்கம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள் ஒப்படைப்பு…

உச்சிப்புள்ளி ரோட்டரி சங்கம் சார்பாக 1000 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள்,  20 அரிசி மூடை, மசாலா பாக்கட், பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள்மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான், இராமநாதபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன், சிவில் சப்ளை வட்டாட்சியர் பழனிகுமார் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உச்சிப்புளி ரோட்டரி சங்க தலைவர் செந்தில் குமார், செயலாளர் தாமரை செல்வன், பட்டய தலைவர் நாகேஸ்வரன் முன்னாள் தலைவர் ஜெயபாலன், தலைவர் தேர்வு அப்தாஹிர், கருணை குமார், சிவக்குமார் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!