வள்ளுவன் அறக்கட்டளையின் சார்பாக கபசுரக் குடிநீர் மற்றும் முககவசம்பொதுமக்களுக்கு வழங்கப்பட்து

ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் ஊராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக அம்மா பூங்காவில் அனைத்து காய்கறி கடைகளும் மீன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.இந்த கொரோனா தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை விரைவில் இந்த நோய் தாக்குகிறது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி இலவசமாக கபசுரக் குடிநீர் மற்றும் முககவசம் வள்ளுவன் அறக்கட்டளையின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்து. வள்ளுவன் அறக்கட்டளையின் சார்பில்ராபர்ட், சிவா, பிரதீப், மற்றும் நம்நாடு நமதுஉரிமை அனைத்து வாகன ஓட்டுநர் சங்க மாநில தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும்,காவல்துறை நண்பர்களுக்கும் இலவசமாக முக கவசங்களை வழங்கினர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!