ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிட வந்தவர் உயிரிழப்பு, உயிருடன் இருப்பதாகக் கூறி மருத்துவக் குழுவினர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முற்பட்டதால் உறவினர்கள் வாக்குவாதம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த போது, (போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே) மாரடைப்பு ஏற்பட்டு அலங்காநல்லூரைச் சேர்ந்த பெரிய காங்கேயன், சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு. இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்ஸ் கம்மியாக இருப்பதாகக் கூறி, மதுரை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவக் குழுவினர், அனுப்பி வைக்க முற்பட்டப்போது, அவர் இறந்து விட்டதாகக் கூறி உறவினர் மருத்துவக் குழுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்த்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்..
இது தொடர்பாக உறவினர்களிடம் தவறான தகவல் அளித்த சுகாதாரத் துறை ஆய்வாளர் ராமரிடம், தலைமை மருத்துவர் வளர்மதி விசாரனை.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









