மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது போலீசாருக்கும் – விழாக்குழுவினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
காளை ஒன்று அவிழ்த்துவிடப்பட்ட போது அந்த காளையுடன் வந்திருந்த நபர் களத்தில் நின்று கொண்டு வீரர்களை நெருங்கவிடாமல் தடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபரை போலீசார் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
காளையுடன் வந்த நபரை தாக்கிய போலீசாரை விழாக்குழுவினர் கண்டித்தனர். களத்தில் நிற்பவர்களை போலீசார் தாக்க கூடாது என்று விழா குழுவை சேர்ந்த சிலர் மைக்கில் கூறினர். இதனால் விழாக்குழுவினருக்கும் – தாக்குதல் நடத்திய போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
போலீசாருடன் விழாக்குழுவினர் வாக்குவாதம் செய்த காரணத்தினால் மதுரை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் கோபம் அடைந்தார். உடனடியாக மைக்கை வாங்கிய எஸ்.பி. மணிவண்ணன், விழாக்குழுவினரை கண்டித்தார்.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்


You must be logged in to post a comment.