கடந்த 2003 ஏப்.7 ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறை பணியாளர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அங்கன்வாடி , பணியாளர்கள் சத்துணவு பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊரக நூலகர்கள், கல்வித்துறை துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதிய சிறப்பாசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 5 ஆயிரம் பள்ளிகள் மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். 3,500 துவக்கப்பள்ளிகளை உயர், மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை அரசு விலக்கி கொள்ள வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ( ஜாக்டோ-ஜியோ) பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
நிர்வாகிகளை அழைத்து பேசி எவ்வித முடிவையும் அறிவிக்க தமிழக அரசு முன்வராததால் காலவரையற்ற போராட்டம் அறிவித்தனர். மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை விடுத்து பணிக்கு வர வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அரசு எச்சரிக்கையை மீறி இன்று (ஜன.22) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரத்தில் வட்டார அமைப்பாளர் பரமேஸ்வரன், பரமக்குடியில் மாவட்ட அமைப்பாளர் பால்ராஜ், கமுதியில் மாவட்ட அமைப்பாளர் குமார், ராமேஸ்வரத்தில் வட்டார அமைப்பாளர் ஜெயசீலன், கீழக்கரையில் மாவட்ட அமைப்பாளர் குமரவேல், திருவாடானையில் தாலுகா செயலாளர் எமர்சன், ஆர்.எஸ்.மங்கலத்தில் தாலுகா செயலாளர் பாலகிருஷ்ணன், கடலாடியில் வட்டார செயலாளர் ஆனந்த் ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கல்வி (ஆசிரியர்கள் உள்பட), கூட்டுறவு, ஊரக வளர்ச்சி, வருவாய், நில அளவை மற்றும் நில ஆவண பதிவு துறை, ஆதிதிராவிடர் நலம், நெடுஞ்சாலை, சுகாதார நலப்பணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பிற்பட்டோர் நலம், போக்குவரத்து, பேரூராட்சி, மீன்வளத் துறை, பத்திரப் பதிவு, கருவூலம் மற்றும் கணக்குகள் துறைகளைச் சேர்ந்த 15,748 பணியாளர்களில் 4, 285 பேர் பணிக்கு வராமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












