விழுப்புரம் மாவட்டம் ஈரியூரில் கிராமநிர்வாக அலுவலரை காணவில்லை! தேடி அலையும் பொதுமக்கள்…

விழுப்புரம் மாவட்டம் -சின்னசேலம் வட்டம் -ஈரியூர் கிராமத்தில் கிராமநிர்வக அலுவலகம் இன்று வரையில் திறக்கப்படாத அவலநிலை காணப்படுகிறது. கிராமநிர்வாக அலுவலைரை தேடி அலையும் கிராமபொதுமக்கள் VAO-வை போனில் தொடர்பு கொண்டால் போண் எடுக்க மறுக்கிறார்.

இவர் VAO பணிமட்டும் செய்கிறாரா? இல்லை பணிக்கு வராமல் வேறு பணிசெய்கிறாரா மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணிசெய்யவில்லை யோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

——————————-/////—————————

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!