தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்று தனித்து நிற்கும் இஸ்லாமியா பள்ளி மாணவ, மாணவிகள்..

இராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள் ராமநாதபுரம் புனித அந்திரேயா பள்ளியில் 24.10.2017 அன்று நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்து கொண்ட இஸ்லாமியா பள்ளி மாணவி A. சுலைஹத் ஃபயிஹா கட்டுரை போட்டியில் முதல் பரிசும் , K. ரிஃப்பத் ஹஸீனா என்ற மாணவி ஓவியப் போட்டியில் முதல் பரிசும் , பேச்சுப்போட்டியில் H.மரியம் என்ற மாணவி இரண்டாவது பரிசும், வினாடி வினா போட்டியில் M. பயாஸ் அகமது மற்றும் சேகு மரைக்கா என்ற இரண்டு மாணவர்கள் இரண்டாம் பரிசும் பெற்றனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகம் பரிசுகள் வழங்கி பாராட்டினர். மேலும் பள்ளியின் தாளாளர் இப்ராஹிம் கூறுகையில் இஸ்லாமியா பள்ளியில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்றவாறு பயிற்சியும் கொடுக்கப்படுவதால், மாணவர்கள் மன உறுதியுடனும், தைரியத்துடனும் போட்டிகளை எதிர்கொள்கிறார்கள் என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!