கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டு கழகம் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி..

கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டு கழகம் சார்பில் புதிய பென்ஷன் பாலிசி குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் புதிய பென்ஷன் பாலிசியான “ஜீவன் சாந்தி” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டு கழக கிளை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.

ஆயுள் காப்பீட்டு கழக அலுவலக வளாகத்தில் பேரணியை கிளை மேலாளர் டி.ஒளிமுத்து தொடங்கி வைத்தார். பேரணி புதுரோடு, எட்டயபுரம் ரோடு, ஏகேஎஸ் தியேட்டர் ரோடு, மெயின் ரோடு வழியாக மீண்டும் காப்பீட்டு கழக அலுவலகத்தை அடைந்தது.

இதுகுறித்து கிளை மேலாளர் ஒளிமுத்து கூறும்போது, ஜீவன் சாந்தி பாலிசி உத்தரவாதமுள்ள, ஆயுள் முழுவதும் பென்ஷன் வழங்க கூடிய திட்டமாகும். இதில் குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சம் முதலீட்டுடன் இந்த திட்டத்தில் சேரலாம், என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!