இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியம் பெருங் களூர் அங்கன்வாடி மைய பதிவேடுகளில் உள்ள தகவல் படி குழந்தைகளின் எடை, உயரம் அளவீடு செய்து சரி பார்த்தார். எடை குறைவான குழந்தைகள் மீது சிறப்பு கவனம் எடுத்து உரிய ஊட்டச்சத்துகளை வழங்குவதுடன் தாய்மார்களுக்கு தக்க அறிவுரை அடிக்கடி வழங்கி குழந்தைகளை ஆரோக்கியத்துடன் பாதுகாக்க அங்கன்வாடி பணியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதி சுப்ரமணியன், ஜெயந்தி உடனிருந்தனர்.
,
You must be logged in to post a comment.