INNOVATIVE TEACHERS AWARD பெற்ற கீழக்கரை மஹ்தூமியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை..

தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சமக்ரா சிக்சா மற்றும் பாண்டிச்சேரி அரவிந்தா சொசைட்டி சார்பாக நடைபெற்ற கற்பித்தலில் முதலீடு இல்லா புதுமை முயற்சி பயிற்சியில் பல்வேறு பள்ளி ஆசிரியைகள் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அதன் மூலம் சிறந்த புத்தாக்காங்களை சமர்ப்பித்த ஆசிரியர்களை அங்கீகாரம் வழங்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில்  கீழக்கரை மஹ்தூமியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி அ.முகமது ரிஸ்வானாவுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் INNOVATIVE TEACHERS AWARD என்ற விருதை 10.07.2019 அன்று சென்னையில் நடந்த விழாவில்  வழங்கினார்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!