கீழக்கரை மஹ்தூமியா பள்ளிகளில் 74 வது சுதந்திர தின விழா..

கீழக்கரை மஹ்தூமியா பள்ளிகளில் 74 வது சுதந்திர தின விழா நடைபெற்றது. மஹ்தூமியா தொடக்கப்பள்ளியில் A.அஸ்கர் அவர்கள் மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளியில் N.முகம்மது ஹனிபா தேசிய கொடியினை ஏற்றினார். மஹ்தூமியா தொடக்க பள்ளி தாளாளர் மீரா சாகிபு  மஹ்தூமியாமேல் நிலைப்பள்ளியின் தாளாளர் S.இப்திஹார் ஹசன், மஹ்தூமியா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. முகம்மது ரிஸ்வானா,மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.கிருஷ்ணவேணி மற்றும் ஜமா அத் தலைவர் S.செய்யது அபுதாஹிர், ஜமா அத் பொருளாளர் ஹாஜா ஜலாலுதீன் மற்றும் ஜமா அத் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கொரான தடுப்பு பணியில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் ஜமீல், பாஸித், பர்னாஸ், ஆரிப்,பஸல், நசிருதீன், அசாருதீன், ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து பதக்கங்கள் வழங்கப்ட்டு சிறப்பிக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!