தென்காசி நகராட்சியில் தூய்மை பணிக்காக 6 புதிய வாகனங்களை நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் துவக்கி வைத்தார். தென்காசி நகராட்சியில் 15-வது மத்திய நிதி குழு திட்டத்தின் மூலம் 43 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக புதிதாக வாங்கப்பட்ட 6 இலகுரக வாகனங்களை தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தென்காசி நகராட்சி சார்பில் முன்னெடுக்கப்படும் அனைத்து பணிகளுக்கும் ஒத்துழைப்பு நல்கவும், கழிவுகளை மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் என பிரித்துக் கொடுக்கவும், பருவமழை காலமாக இருப்பதால் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த வீடு தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்கவும், வீட்டின் உட்புறங்களிலும், வெளிப்புறங்களிலும் தூய்மையாக பராமரிக்கவும், சேமித்து வைக்கும் தண்ணீரை கொசு புகாதவாறு மூடி வைக்கவும் நகர் மன்ற தலைவர் ஆர். சாதிர் தென்காசி நகர பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நகர் மன்றத் துணைத் தலைவர் கேஎன்எல் சுப்பையா, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், நகர்மன்ற உறுப்பினர்கள் அபுபக்கர், முத்துக் கிருஷ்ணன், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் மகேஸ்வரன், மாதவ ராஜ்குமார், நகர திமுக பொருளாளர் ஷேக்பரீத், மாவட்டபிரதி நிதி பாலசுப்பிரமணியன், மாவட்ட பொறியாளர் அணித்தலைவர் சே.தங்கப் பாண்டியன், சன்ராஜா, ஒப்பந்ததாரர் சங்கர சுப்பிரமணியன், மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் துரைசாமி,சுடலை, முத்து மாரியப்பன், முத்துக்குமார், சுப்பிரமணியன், மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









