இலஞ்சி பி.எட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் பண்டிகை ஆகிய இரு பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலா வின்சிலா தலைமை வகித்தார். நிகழ்வில், கல்லூரி பேராசிரியர்களை மாணவ ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

தொடர்ந்து, அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. இதில் உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், லீதியாள் சொர்ண ஜெயா, ஐரீன், ஜெசி டார்லிங், ஜெபா எபனேசர், நூலகர் முனைவர் ஏஞ்சலின், உடற்கல்வி இயக்குனர் ஐசக் ஜான்சன், அனிதா, அலுவலக பணியாளர்கள் ப்ரெட்ரிக், ஷேரன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.