விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு ..

சாலை விபத்தில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த நபரை உரிய நேரத்தில் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்த காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் மேல்நாரியப்பனூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் சாலை விபத்தில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார் அப்போது யாரும் உதவி செய்யாத தருணத்தில் அவ்வழியே தனியாக சென்ற கள்ளக்குறிச்சி துணை கண்காணிப்பாளர் திரு,இராமநாதன் விபத்துக்குள்ளான நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இச்செய்தி சமூக ஊடகங்களின் வாயிலாக மாவட்டத்தில் பரவியுள்ளது காவல் துறையினரின் இத்தகையஉதவியைகண்டு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!