விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர்..

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 08.05.2020 அன்று முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜமுரளி  பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த முதியவரை காவல் வாகனத்தில் ஏற்றி சென்று செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!