கீழக்கரையில் வீரகுல தமிழர் படையின் சார்பாக தமிழீழ போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்..

கீழக்கரையில் வீரகுல தமிழர் படையின் சார்பாக தமிழீழ போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் வீரகுல தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் தலைமை தாங்கினார், மாநில அமைப்பு செயலாளர் பழனி முருகன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட பொறுப்பாளர் சபீர், ஆதி தமிழர் கட்சி பொறுப்பாளர் சக்தி உள்ளிட்ட தோழமை அமைப்பினர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியை வீரகுல தமிழர் படை பொறுப்பாளர்கள் திருமுருகன், பிரபு, அஜித்குமார், ஈஸ்வரன், அஜித்,ராஜா, ஹரி, கோபி, சக்திவேல் ஒருங்கிணைத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!