கீழக்கரை பகுதியில் தொடரும் மின் தடை புரளி….

கீழக்கரை நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் தினம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மின் தடை ஏற்படும் என சில வாட்ஸ் அப் தளங்களிலும், சிலர் தன்னுடைய மொபைலில் ஸ்டேடஸ்டாக வைத்தும் இருந்தனர்.இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்து வந்தனர்.

இது சம்பந்தமாக கீழக்கரை மின்சார வாரிய ஊழியர் ஒருவர் கூறுகையில், “தயவுசெய்து கீழக்கரை மின்சார வாரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றி பொதுமக்கள் மின் தடை செய்தியை நம்ப வேண்டாம் என்றார். இப்படி சிலர் தன்னிச்சையாக பதிவு செய்யும் தகவலால் மின் வாரிய ஊழியர்களிடம் பொதுமக்கள் தொடர்ந்து போண் செய்து கேட்பது சங்கடமாக இருக்கிறது என்றார்.

எனவே பொதுமக்கள் யாரும் மின் தடை சம்பந்தப்பட்ட புரளியை நம்ப வேண்டாம் என்று கீழை நியூஸ் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!