புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அடிச்சு துவைக்க போகும் மழை!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு இன்னும் மழை கிடைக்க வில்லை. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் இன்னும் நிரம்பவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது.பருவமழை காலம் தொடங்கி ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்து வந்த நிலை யில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலில் உருவாகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை திரிகோண மலையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு தென் கிழக்கே 750 கி.மீ. தொலை விலும், சென்னையில் இருந்து தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.இது வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைந்தது. அதன் பிறகு அடுத்த 2 நாட்களில் வட மேற்கு திசையில் தமிழகம் -இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும். மயிலாடுதுறை, திருவாரூர் நாகப்பட்டினம், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். ஒருசில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும்.சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 30-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? என கண்காணிக்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் கடலோர மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி வருவதால் மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!