நடுத்தெரு பள்ளி கழிவு நீர் பிரச்சினை.. ஜமாஅத் சார்பில் விளக்கமும்.. மறுப்பும்.. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனமே..

நடுத்தெரு ஜமாத் பள்ளி பின்புறம் கழிவு நீர் வழிந்தோடைவது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட ஜமாத்தினர் முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அப்பகுதி இளைஞர்கள் குற்றச்சாட்டை வைத்தனர்.

இது சம்பந்தமாக நடுத்தெரு ஜமாத்தை சார்ந்த அல்லாபக்ஸ் என்பவர் கூறுகையில், “ஜமாத் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். மேலும் கடந்த இரண்டு மாதங்களாக நகராட்சி ஆணையரிடம் தொடர்ந்து வலியுறுத்தி மனுவும் கொடுத்துள்ளோம்.  மேலும் பெருநாள் சமயம் என்பதாலும், பேவர் பிளாக் சாலை வேலை நடப்பதாலும், தற்காலிகமாக நிவர்த்தி செய்து தந்தார்கள், ஆனால் பெருநாள் சமயம் என்பதால் தண்ணீர் செலவினங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் வாருகால் நிறைந்து வழிந்தோடி வருகிறது.  இதற்கு முறையான நிரந்தர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!