மண்டபம் மேற்கு வாடி வடக்கு கடற்பகுதியில்தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி அமைச்சரிடம் மீனவர்கள் மனு..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்குவாடி வடக்கு கடல் டி -நகர் முதல் மண்டபம் அரசு டீசல் பங்க் பழைய டி – ஜெட்டி வரை கடற்பகுதியை தங்கு தளமாக கொண்டு 300 விசைப்படகுகள், 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இப்பகுதியில் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து வருகிறது. இதனால் மீனவர்களுக்கு பொருளாதார செலவு ஏற்பட்டு மீனவர் பலன் மீன்பிடி தொழில் செய்ய இயலாமல் உள்ளனர் மண்டபம் மீனவர் நலன் கருதி மேற்குவாடி வடக்கு பகுதி டி -நகர் முதல் அரசு டீசல் பங்க் பழைய டி – ஜெட்டி வரை தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடர் மீனவர் மானியக் கோரிக்கையில்தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ. 25 கோடி அறிவித்தார். 

அறிவிப்பிற்கு பின் தூண்டில் வளைவு பணி இதுவர நடைபெறவில்லை. இதனால் நடப்பாண்டு காற்றின் வேகம் அதிகரிப்பால் பல விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அதிக சேதம் ஏற்பட்டது. தமிழக முதல்வர் அறிவித்த ரூ25 கோடி மதிப்பிலான தூண்டில் வளைவு பணியை துரிதமாக அமைத்து தர வேண்டும் என மீனவர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்பகுதி மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூண்டில் வளைவு அமைக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணனிடம், மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க செயல் தலைவர் பாலசுப்ரமணியன், செயலர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் இன்று கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, அனைத்து விசைப்படகு மீனவர் சங்க உதவி தலைவர் செய்யது சுல்தான், உதவி செயலர் விஜயரூபன், பொருளர் செல்வகுமார், ஆலோசகர்கள்  காதர் மொய்தீன், அபூபக்கர் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆசாத், காளிமுத்து சர்புதீன், தாவூத் கான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!