சிவகிரியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய சரக பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த உள்ளார் பகுதியை சேர்ந்த பூலித்துரை என்பவரின் மகன் காசிதுரை தலைவனார் @ கார்த்திக் (25) மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.