திருச்சி, பரமக்குடி, முசிறி, தேனி, திண்டுக்கல், வேலூர், மதுரை, கரூர், இராமநாதபுரம் பகுதியை சோ்ந்த ஒரு கூட்டம் பல நாட்களாக ஒரு நெட்வொர்க் வைத்து ஒன்று சேர்ந்து திருடி அருகே இருக்கும் வந்துள்ளார்கள். பின்னர் திருடிய பணத்தையும், அவர்களுக்கு அருகில் உள்ள தங்கும் விடுதியில் சந்தித்து பிரித்து செல்லும் வழக்கத்தில் இருந்துள்ளார்கள். இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல் துறையினர் துரிதமாக திட்டம் தீட்டி இந்த கூட்டு கொள்ளையர்களை கூண்டோடு கைது செய்துள்ளார்கள்.
இதைப்பற்றி மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் அவர்களின் தனிப்படை காவலர் சரவணகுமார் கூறுகையில். ” மொத்த கூட்டத்தையும் அவர்கள் தங்கிய room duplicate key மூலமாக முன் கூட்டியே கட்டில் அடியில் படுத்து கொண்டு அனைவரும் வந்து பங்கு போட்டு கொண்டு இருக்கும் போது வெளியில் உள்ள எனது டீம் கு மிஸ்டு கால் கொடுத்து சுற்றி வளைத்து கைது செய்தேன். பின்னர் அங்கேயே வைத்து முறைப்படி விசாரித்த பின் அவர்கள் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். இந்த வழக்கில் இதுவரை 12 போ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேற்கொண்டு விசாரனை நடத்தினால் இன்னும் பல உண்மைகள் வெளி வரும் என்றார்.


உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









