சோழவந்தான் பாம்பலம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே  மன்னாடி மங்கலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு பாம்பலம்மன் திருக்கோவில் 58 ஆம் ஆண்டுமுளைப்பாரி திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை சோழவந்தான் தொழிலதிபரும் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவருமான மணி முத்தையா வள்ளி மயில்.குடும்பத்தினர்  செய்திருந்தனர் இதில் எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளரும் சோழவந்தான் அரிமா சங்க தலைவரும் தொழிலதிபருமான டாக்டர் மருது பாண்டியன் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் முன்னதாக நடந்த சிறப்பு வழிபாட்டில் கிராமத்தார்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!