தொண்டி கடலில் மீனவர்கள் மோதல்..

இராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை அருகே தொண்டி கடலில் வெடி வீசி மீன் பிடித்தல் தொடர்பாக இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.  இன்று காலை (05/8/18) தொண்டி புதுக்குடி மற்றும் நம்புதாளை மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர்.

மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இடையே மோதல் உருவானது. இதில் நம்புதாளை சே மீனவர் முத்துராஜா மண்டை உடைந்தது. இதையடுத்து இரு தரப்பினர் இடையே கரையில் மீண்டும் மோதும் சூழல் நிலவுவதால் தமிழக மெரைன் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!