விருதுநகர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தீ விபத்து…

விருதுநகர் வட்டாச்சியர் அலுவலகத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத்துறை வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் வட்டாச்சியர் அறையிலிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்தாக கூறப்படுகிறது. மேலும் அந்த அறையிலிருந்த மேஜை, நாற்காலி மற்றும் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. நேற்று இரவு அந்தப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, மின்சாரக் கோளாறு ஏற்பட்டு விபத்து நடந்ததாக கூறுகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!