சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்து..

சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணா காய்கறி மார்கெட் பின்புறம் ரமேஷ் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார் அந்த இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலிருந்த மார்க்கெட்டில் பரவியது கொரனோ நோய்த்தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூட கூடாது என்பதற்காக அண்ணா காய்கறி மார்க்கெட் சிவகாசியில் இரண்டு இடங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டது உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் இதில் மார்க்கெட்டில் இருந்த ஒரு கடை மற்றும் இரும்பு கடை முழுவதும் எரிந்து சேதம் ஆகியது மார்க்கெட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இந்த தீ விபத்து குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!